கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

268 0

இலங்கை ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

55 வருடங்களாக கிராம சேவகர் துறையில் நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.டீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய போதிலும் தீர்வு கிடைக்காமையின் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment