400 தனியார் பாடசாலைகளை அமைக்க தயாராகிறார்கள் – பந்துல குணவர்தன

11416 0

அரச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள 40 தனியார் பாடசாலைகளை 400 ஆக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை பத்திரம் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கண்களில் மண்ணை தூவி இலவச கல்வியை தனியார் மயப்படுத்த இந்த அமைச்சரவை பத்திரம் ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(

Leave a comment