சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

248 0

கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். 

அங்கு அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 02 வலைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட 2487 கிலோ கிராம் மீன் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

அதன் படி கைது செய்யப்பட்ட நபர்கள், சட்டவிரோத வலைகள், படகுகள் மற்றும் மீன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதியும் இந்தப் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேருடன் 04 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

Leave a comment