தாதிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகங்களால் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. விசாரணைகள் இடம்பெறுவதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதி செய்தார் என்றும் குறப்பிடப்பட்டிருந்த்து.
இந்தச் சம்பவம் தொடர்பில் சில ஊடகங்கள் அனைத்து தாதிய உத்தியோகத்தியோகத்தர்களையும் பாதிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளரால் மறுப்பு அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


