யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்பிராந்திய மாநாடு(காணொளி)

17772 0

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசனம் க.அருந்தவராசா தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்,தமிழ் மக்கள் கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன், சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் உட்பட அக்கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment