ஜனாதிபதி மீண்டும் மக்கள் ஆணையை பெறுவது பொருத்தமானது-பாட்டளி

24239 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணையை பெற்றுக் கொள்வது மிகவும் பொருத்தமானது என்று பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க கூறியுள்ளார். 

நேற்று கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஜனவரி 08ம் திகதியின் பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க கூறியுள்ளார்.

Leave a comment