ஸ்ரீ ல.சு.க.யின் ஜனாதிபதி அபேட்சகர் தீர்மானம் ஐ.தே.க.யின் தூண்டுதல் ஆகும்- ஷான் விஜேலால்

8526 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும் நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கையாகும் என தென் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான  கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து எடுக்கப்பட வேண்டிய தீர்மானத்தில் இடையிலுள்ளவர்கள் தலையிடுவதனால் கட்சியின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் அவர் விளக்கிக் கூறினார்.  

Leave a comment