வடக்கு ஆளுநர் கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம்

298 0

இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார். 
கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநருக்கு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
ஆளுநரின் இந்த விஜயத்தின் போது ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனும் உடனிருந்தார். 

Leave a comment