முதல்வருக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

388 0

01-3வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.இந்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

வடக்கில் சிங்கள சமூகத்தை பாதுகாப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.வடக்கில் சிங்கள குடும்பங்களை குடியமர்த்த கூடாது, என்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் புத்தர் சிலைகள் இருக்க கூடாது எனவும் தெரிவித்தமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனுடைய அந்த கருத்துக்கள் அரசாங்கத்தையே விமர்சிப்பது போல் இருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.