குகவரதன் கைது!

208 0

மேல் மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான சண்குகவரதன் கைதாகியுள்ளார்.

கைதாகியுள்ள அவரை, ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை நீக்கியுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் அறிவித்துள்ளார்.

மேலும், 7 கோடி ரூபாய் காசோலை மோசடி குற்றச்சாட்டின் பேரிலேயே மேல் மாகாண சபை உறுப்பினர் சண்குகவரதன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு, அமைச்சர் மனோகணேசனின் தன்னிச்சையான செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் சுதந்திர அணியில் குகவரதன் முன்னின்று செயற்பட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதோர் விடயமாக பேசப்படுகின்றது. 

Leave a comment