பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ள ரயில்வே திணைக்களம்

306 0

ரயில்வே திணைக்களம் பணிபகிர்ஷ்கரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இன்று கூடவுள்ளது. 

இன்று நள்ளிரவுடன் ரயில்வே ஊழியர்கள் பணிபகிர்ஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர். 

புதிய அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணைவாக இன்று கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயலாளர் லால் ஆரிய ரத்தன தெரிவித்தார். 

சகல பிரச்சினைகளும் சுமூகமான நிலையில் தீர்க்கப்படும் என அஜூன ரணத்துங்க போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்கும் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என ரயில்வே திணைக்களம் எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a comment