நள்ளிரவில் மாயமான முச்சக்கரவண்டி

205 0

பிரதேச செயலக சிற்றூழியர் ஒருவரின் முச்சக்கரவண்டி தங்கும் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிற்றூழியரான ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹம்மத் ஹனீபா முஹம்மத் முஸ்தபா (வயது  47) என்பரின் முச்சக்கவண்டியே திருடப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச செயலகத்தின் தாண்டியடியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே திருட்டுப் போயுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு நித்திரைக்குச் சென்ற சமயம் தங்கும் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை இன்று அதிகாலை  எழுந்து பார்த்தபோது முச்சக்கரவண்டி திருட்டுப்போயிருந்ததாக அதன் உரிமையாளரான வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பிரதேசத்திலுள்ள வீதிகளைக் கண்காணிக்கும் வகையில் கடைகளிலும் வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராக்களில்; பதிவாகியிருக்கும் காட்சிகளின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட ‪பொறுப்பதிகாரி ஈசாலெப்பை பதூர்தீன் தெரிவித்தார்.

Leave a comment