உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

327 0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார். 

வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. 

இரண்டு கட்டங்களாக இந்த விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன், முதல் கட்டம் நாளை முதல் ஜனவரி 01ம் திகதி வரை இடம்பெற உள்ளது. 

இடண்டாம் கட்டம் ஜனவரி 08ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment