கேள்விக்குள்ளான மஹிந்தவின் உறுப்புரிமை!

272 0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான பிரச்சினை குறித்து ஆய்வு செய்து விரைவில் தனது நிலைப்பாட்டை வழங்குவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் மற்றும் அரச விவகாரம், கண்டி அபவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரின் பாராளுமன்ற உறுப்புரிமையை கேள்விக்குள்ளாக்கினர்.

இவ் விடயம் குறித்தும் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்தும் சீராக ஆய்வு செய்து தமது நிலைப்பாட்டை வெகு விரைவில் வெளியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a comment