சரத் பொன்சேகாவை நிராகரித்தமை குறித்து ரணில்!

235 0

பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நிலையில் அமைச்சரவைப் பட்டியலிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதும் அதனை ஜனாதிபதி நிரகாரித்தமை தொடர்பான விளக்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தவுள்ளார்.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின்போதே பிரதமர் இது தொடர்பான விளக்கத்தை இன்றைய தினம் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன்  டி .எம் . சுவாமிநாதன், ஏ .எச் .எம் .பௌசி, விஜிதமுனி சொய்சா, ரங்கே பண்டார, வசந்த சேனநாயக்க மற்றும்  பியசேன கமகே ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலிலிருந்து ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment