இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

219 0

இலஞ்சம் பெற்ற மேலதிக படை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ‍ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமததப்பட்டுள்ள குறித்த அதிகாரியை நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேவைத் தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தான் பரிந்துரை செய்வதாக தெரிவித்து, ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை கேட்டு, பின்னர் அதனை ஒரு இலட்சம் ரூபாவாக குறைத்து, அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Leave a comment