பாராளுமன்றம் இன்று கூடுகிறது

348 0

 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. 

புதிய அமைச்சரவையின் செயலாளர்கள் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, அமைச்சரவையில் பதவி கிடைக்காத சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக போராட உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment