கொழும்பில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

304 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள்  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரிய குறித்த இளைஞர்கள் மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அண்மைக்காலமாக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இருந்தபோதிலும் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறாத நிலையில், இன்றைய தினம் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment