சிரேஸ்டத்துவம் அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானம்

332 0

புதிய அமைச்சரவை இதுவரை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளாததால் சிரேஸ்டத்துவம் அடிப்படையில் நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆளும் கட்சியின் 7 ஆவது ஆசனம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சபாநாயகரின் இடது பக்கம் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும், சபாநாயகரின் வலது பக்கம் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a comment