மக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்-ராஜித

260 0

எதிர்வரும் வருடத்திற்குள் மக்கள் பொருளாதார திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment