அடுத்த வாரம் பொது வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் மேடைகளில் பேசப்படும்-விதுர விக்ரமநாயக்க

312 0

எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் அரசியல் மேடைகளில் பேசப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் ஒவ்வொருவரும் நான் தான் பொது வேட்பாளர் என தெரிவிக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் இருப்பதாகவும் அவைகளில் நன்மையை போன்றே தீமையான பக்கமும் இருப்பதாகவும் அவற்றை நன்கு அவதானித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment