ரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு

248 0

அரசமைப்பில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க முயல்கின்றார் என குற்றம் சாட்டியுள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜேவிபி இதற்கு இடமளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்கின்றார் என அவர் தெரிவித்துள்ளர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் பயன்படுத்த முனைகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்கலாம் என்பதை ரணில் காண்பிக்க முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் அவ்வாறு செய்யாவிட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக ரணில் குறைக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment