தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது- சி.வி விக்னேஷ்வரன்

304 0

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதமரை நியமிப்பது உட்பட்ட தெற்கின் அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment