சீனாவில் தொற்றுநோய்களுக்கு ஒரே மாதத்தில் 2,138 பேர் பலி

340 0

மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளனர். 

தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா விளங்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 138.64 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் கடந்த (அக்டோபர்) ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான  2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 மக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 539 பேர். இவர்களில் பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் வைரல் ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment