இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது – சி.வி.

274 0

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லா தாக் கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையான தென முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள் விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்ற போதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருதவழி செய்யுமென முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.

தமிழர்களின் உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அபிவிருத்தி முக்கியமெனக் கருதமுடியாதெனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே அத்தியாவசியமானது. இராணு வத்தினரின் கோரிக்கைகளுக்கு இடம் அளித்தால் வனாந்தரத்தில் மனிதன் படுக்கும் கூடாரத்தினுள் ஒட்டகத்தை உள்நுழைய விட்ட கதையாகி விடு மெனத் தெரிவித்துள்ளாா்.

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் இராணு வத்தினர் வழங்கும் பணத்திற்காக ஒற்றர் வேலைகளைப் பார்த்து வருவதா கவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதுடன் இந்த நிலை தொடர்ந்தால் இரா ணுவம் எம்முள் ஒரு சமூக அலகாக ஊடூருவி விடுமெனத் தெரிவித்துள்ளாா்.

Leave a comment