யாழில் 271 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

210 0

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் டெங்கு நோய்த் தடுப்பு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை சுகாதாரப்பிரிவினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment