நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை உத்தரவு

249 0

கஜா புயல் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. .புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில்,  கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a comment