யாழில் ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி!!!

28916 0

யாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12.45 மணியளவில் பயணித்த கடுகதி ரயிலுடன்  கார் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கார் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் யாழ். அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஜெகநாதன்  என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் 14 விபத்துச் சம்பவங்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளன. குறித்த ரயில் கடவையில் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment