சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடை முதலாளி கைது

282 0

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர் கடை முதலாளியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று (22) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றின் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்று பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர் கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ள போது கடையில் எவருமில்லாததை அடுத்து கடை முதலாளி அச்சிறுமியை கடையின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட் சிறுமி தனது தாயிடம் தனக்கு நோர்ந்த கதி குறித்து தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் பாடசாலை அதிபர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

இதை அடுத்து குறித்த கடை முதலாளியை நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இதில் கைது செய்யப்பட்ட கடை முதலாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment