ஹெரோயினுடன் ஒருவர் கைது

241 0

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுள்ளவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வதுள்ளவத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment