கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

205 0

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.

மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என ஆவேசமாக தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறும் கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரம் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment