தொல்பொருள் சின்னங்களை அழிப்பதாக அடிப்படைவாதிகள் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர்-விஜயதாஸ

228 0

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை அழிப்பதாக பொய்யான பிரச்சாரம் செய்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே அடிப்படைவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

இது நல்லிணக்கத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தனது அமைச்சின் விடயம் தொடர்பாக விளக்கமளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

அங்கு தற்காலிகமாக இராணுவ முகாம்களை அமைக்கும் போது தற்காலிக புத்தர் சிலைகளை வைத்துள்ளனர். ஆனால் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்ட பின்னர் அந்த சிலைகளை எடுத்துச் செல்லப்படாது அவ்வாறே கைவிட்டு செல்லப்பட்டுள்ளன. அந்த சிலைகள் மீது தார் வீச்சுகள் நடந்துள்ளன. தெற்கில் இருந்து செல்பவர்கள் அதன்மீது தாரை வீசிவிட்டு இப்படித்தான் அங்கு நடக்கின்றது. என காட்ட முயற்சிக்கலாம் என்றே நாம் கருதுகின்றோம். என அவர் தெரிவித்துள்ளர்

Leave a comment