சிற்றூர்திகள் இனந்தெரியாதோரால் மீது தாக்குதல்

345 0

கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன.

குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான வீதியில் பகல் வேளைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உந்துருகளில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்துகொண்டு வந்த தரப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். என சிற்றூர்தி உரிமையாளளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல்களில் சிற்றூர்திகளின் கண்ணாடிகளே உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத்தின் கூட்டத்தில்  பஸ் உரிமையாளர்களுக்கும், சிற்றூர்தி உரிமையாளர்களுக்கும் இடையே கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டது

என்றும்  அதன் விளைவாகவே குறித்த  தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் சிற்றூர்தி உரிமையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment