சீரற்ற காலநிலை:தாழமுக்கத்தால் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்

228 0

அராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக நேற்று சூறாவளியாக உருமாறிய லுவான் சூறாவளியானதுஇ தற்பொழுது தென்மேற்கு அராபிய கடல்பிராந்தியத்திலிருந்து மணிக்கு 7 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துகொண்டிருப்பதாகஇ வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிஇ க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இது ஓமான் நாட்டின் சலசா பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 800 மீற்றர் தூரத்திலும் யெமன் நாட்டின் சொகட்டா தீவிலிருந்து கிழக்காக 680 கிலோமீற்றர் தூரத்திலும் யெமன் நாட்டின் அல் – கைடா பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 940 கிலோமிற்றர் தூரத்திலும் தற்பொழுது காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்துஇ மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துஇ அடுத்துவரும் 5 நாட்களில் யெமன் நாட்டிற்கும் ஓமான் நாட்டின் தென்கரையோர பிரதேசத்திற்கும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதோடுஇ இதேவேளை வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த தாழமுக்கமானதுஇ கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்பொழுது இந்தியா – ஒரிஸா மாநிலத்தின் கோபால்பூர் பிரதேசத்திலிருந்துஇ தென்கிழக்காக 560 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திர பிரதேசத்தின் கலிங்கப்பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 510 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் ஒரிஸா மாநிலத்தையும் வடஆந்திராவையும் நோக்கி நகர்ந்துஇ எதிர்வரும் 11 ஆம் திகதி கோல்பூரிற்கும் கலிங்கப்பட்டணத்துக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் கூறினார்.

அத்துடன் இலங்கையில்இ மன்னாரிலிருந்து பொத்துவில்இ புத்தளம்இ கொழும்புஇ காலிஇ அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் கடற்பிராந்தியங்களிலிருந்து மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனத் தெரிவித்ததோடுஇ கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment