கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு மாதா சொரூபம் திருட்டு

267 0

கனகபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில் காணப்படும் குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த மாதம் 08 ஆம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலை விசமிகளால் எடுத்தச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டிருக்கவில்லை எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்த ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆலயத்தில் சட்டவிரோத மற்றம் சமூகத்திற்கு ஒவ்வாத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்கனவே பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் இடம்பெறாது ஆலயத்தின் புனிதத் தன்மையை பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் பலமுறை பொதுமக்களிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவின் சொரூபம் விசமிகளால் எடுத்து செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a comment