அனர்த்த நிலையை எதிர்கொள்ளத் தயார் – வஜிர

210 0

எத்தகைய திடீர் அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்காக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் கடும் மழை காரணமாக, நாட்டில் பல பிரதேசங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்புடன் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment