ஜனாதிபதி அழைத்தும் வர மறுக்கும் வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர்

265 0

ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கையின் தூதுவர் பிரியானி விஜேசேகரவை ஜனாதிபதி திருப்பியழைத்தும் அவர் இதுவரை நாடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தனது தொலைபேசி அழைப்புக்கு பல மணி நேரங்களாக எவரும் பதிலளிக்க வில்லையெனவும், அப்படியான ஒரு தூதுவர் நாட்டுக்கு அவசியமில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

பொஸ்னியா, சேர்பியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா போன்ற பல நாடுகளுடன் இலங்கையின் தொடர்புகளை மேற்கொள்ள ஒஸ்ட்ரியா தூதரகமே பயன்படுத்தப்படுகின்றது. இதுபோன்ற முக்கிய தூதரகமொன்றில் தொலைபேசி அழைப்புக்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டுமென்றால், அதனை என்னவென்று கூறுவது எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

Leave a comment