நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை

207 0

நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியா குமரி) மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Leave a comment