களு சாகர”வின் வலது கை “கொண்ட தாரக” துப்பாக்கிச் சூட்டில் பலி

211 0

அங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ராஜகிரிய, கலபலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த “கொண்ட தாரக” எனும் தாரக இரோசன பெரேராவே  சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (5) மாலை 3.30 மணியளவில் அங்கொட சந்திக்கு அருகில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த “கொண்ட தாரக” என்பவர், பாதாள உலக தலைவர் என அறியப்பட்ட “களு சாகர” என்பவரின் வலது கை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment