பழைய முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் -சமரசிங்க

207 0

மாகாண சபை தேர்தலை புதிய கலப்பு முறையின் அடிப்படையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் பழைய முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் விருப்பத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் தற்போது அந்த முறைமை சிலருக்கு பிடிக்காமல் இருப்பது சிக்கலுக்குரியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment