புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் -மஹிந்த

208 0

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்தே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது இத்தனை கால  முயற்சியின் தோல்வி மட்டுமல்லாது மக்களின் வாக்குறுதியை மீறும் செயல் எனவும் கூறுகின்றது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பின் போது மாகாணசபை தேர்தல்கள் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment