அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயம்

196 0

அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் ஒருவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்துருகிரிய வானே கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த கும்பல் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பண்டா என்றழைக்கப்படுகின்ற ஹசித என்பவரே சம்வத்தில் காயமடைந்துள்ளார்.

Leave a comment