பேருளையில் துப்பாக்கிச் சூடு, இளைஞன் படுகாயம்

271 0

பேருவளை பிரதேசத்தில் நேற்று (03) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பேருவளை, பன்னில, 80 ஏக்கர் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது இனம் தெரியாதோர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முங்ஹேன, வலத்தற பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளான். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment