தரம் 5 புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- கல்வி அமைச்சு

212 0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment