இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது

204 0

இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் எல்பிட்டிய, மண்டகந்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து உள்நாட்டு தாயரிப்பு ரிவோல்வர் ஒன்றும் வௌிநாட்டு தயாரிப்பு போர 12 வகையை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment