விக்ரமரத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

206 0

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்று ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மற்றும் பிள்ளைகள் இருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் 21 வயதுடைய மகன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 5 வயதுடைய மகன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வாகனத்தின் ஓட்டுனரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment