நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது

253 0

செல்லுபடியான வீசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி இலங்கையில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a comment