இரத்தினபுரி பிரதேசத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

234 0

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் இரத்தினபுரி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, மல்வல மற்றும் வட்டவல ஆகிய பிரதேசங்களில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்த அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இரத்தினபுரி இரத்தினக்கல மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment