ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு

375 0

ரயில் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், கட்டண அதிகரிப்பின் பின்னரும் ரயில்வே கட்டணங்கள் பஸ் கட்டணத்திலும் பார்க்க குறைவாகவே காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லையெனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment