பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களே விரும்பவில்லை: கனிமொழி

211 0

பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருமணமான பெண் தன் கணவரின் அனுமதியின்றி வேறொரு ஆணுடன் கள்ள உறவு கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழி இந்த தீர்ப்பு குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “பெண் பிள்ளைகளை விரும்பாத பலர் நம் நாட்டில் இன்னமும் இருக்கின்றனர்.
அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை. அவ்வளவு ஏன், சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு பதவி வழங்க திமுகவில் நிச்சயம் நான் வலியுறுத்துவேன்” என்றார். தொடர்ந்து பேசிய கனிமொழி, முதலமைச்சராகும் எண்ணம் தமக்கு ஒருபோதும் இல்லை என்றும், டெல்லி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

Leave a comment